சென்னை: தமிழகத்தில் நாளை நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாளை (19ம் தேதி) நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டுகிறோம். அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் அனைவரும் காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நிறைவுபெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்….
The post உள்ளாட்சி தேர்தல் ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.