வேட்பு மனுவை வாபஸ் பெற்ற வேட்பாளர் அதிமுகவினர் சாலை மறியல்

திருத்தணி: திருத்தணி நகராட்சி 18வது வார்டு திமுக வேட்பாளராக சரஸ்வதி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் வாணிஸ்ரீ வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் அதிமுக வேட்பாளர் வாணிஸ்ரீ வேட்பு மனுவை வாபஸ்பெற வந்தார். அப்போது அதிமுக நகர செயலாளர் சவுந்தர்ராஜன் தலைமையில் அவரை தடுக்க முயன்றனர். அதையும் மீறி வாணிஸ்ரீ துணைத்தேர்தல் அலுவலகத்துக்கு சென்று மனுவை வாபஸ் பெற்றார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் முன்னாள் கவுன்சிலர்கள் மாசிலாமணி, ஜெயசேகர்பாபு, சுரேஷ், நாகூர் பிச்சை, முனிசாமி, தாமு உட்பட 50 பேர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருத்தணி வருவாய் ஆய்வாளர் ஜெய்சங்கர், அனுமதியின்றி ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டு மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் நடந்து கொண்டவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post வேட்பு மனுவை வாபஸ் பெற்ற வேட்பாளர் அதிமுகவினர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: