இதைத் தொடர்ந்து புதிய முனையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது, பயணிகள் முனைய செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வந்தன. பயணிகளின் உடைமைகளை ஸ்கேன் செய்வதற்கான எந்திரங்கள், செக் இன் கவுண்டர்களில் தேவையான வசதிகள், ஆட்களை பரிசோதனைக்கான கூடத்தில் ஸ்கேன் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வந்தன.
இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை புதிய முனையம் வழியாக போக்குவரத்து துவங்கியது. சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த முதல் விமானத்தின் பயணிகளுக்கு மலர் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
The post தூத்துக்குடி புதிய ஏர்போர்ட் செயல்பாட்டிற்கு வந்தது appeared first on Dinakaran.
