இந்நிலையில் ரயில்வே வாரியத்திலுள்ள அனைத்து பிரிவுகளும் ஏற்கனவே திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், வாரிய தலைவரின் ஒப்புதல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை பறக்கும் ரயில் -மெட்ரோ ரயில் இணைப்பு கொள்கை அளவிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணிகள் அடுத்த 3 மாதத்திற்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, சென்னை பறக்கும் ரயில்- சென்னை மெட்ரோ ரயில் இணைப்பிற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கி உள்ளது.
அடுத்தகட்டமாக, தமிழ்நாடு அரசுக்கும் சென்னை மெட்ரோ ரயில்வேக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து (குமடா) மூலம் அடுத்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்படும். அதன்படி இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் ரயில் சேவை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கப்படும். மேலும் இரண்டு ஆண்டிற்குள் சீரமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில் தடத்திற்கு இணையான சேவை வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரயில்வே வாரிய கொள்கை அளவிலான ஒப்புதல் மெட்ரோ – சென்னை பறக்கும் ரயில் சேவை 3 மாதத்திற்குள் இணைப்பு: பறக்கும் ரயில் சேவை மாநில அரசிடம் ஒப்படைப்பு; இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.
