தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை: வங்கக் கடலின் வட மேற்கு மற்றும் அந்தமானுக்கு வடக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றுசுழற்சி காரணமாக மேற்கு திசையில் இருந்து வீசப்படும் காற்று தடை பட்டு தரைப் பகுதிக்குள் நுழைவதால் தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் மழை பெய்யும். குறிப்பாக நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநிலை 24ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அதற்கு பிறகு படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியாக இருக்கும். தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் இன்றும் நாளையும் வீசும். 23, 24ம் தேதிகளில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும்.

The post தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.

Related Stories: