சந்தைமேட்டில் கலைஞர் அறிவாலயம், நூலகம், கலைஞர் முழு உருவ வெண்கலை சிலையை திறந்து வைக்கிறார். முதல்வரின் வேலூர் பயணத்தை ஒட்டி சென்னை சென்ட்ரலில் ரயில்வே போலீசார் 350 பேர், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேலூரில் முதலமைச்சர் வருகையை ஒட்டி இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்க தடை விதித்து வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post சென்னை சென்ட்ரலில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் இன்று வேலூர் பயணம் appeared first on Dinakaran.
