திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே, திருச்சியில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து சாலையின் நடுப்பகுதியை தாண்டி வந்துள்ளது. அப்போது எதிரே வந்த ஆர்டிஓவின் ஜீப்பில், பேருந்து மோதியது. இதனால் நிலைதடுமாறிய ஜீப் டிரைவர் பிரபாகரன் விபத்தை தவிர்ப்பதற்காக இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது சாலை ஓரம் விரிவாக்க பணிக்காக குழி பறிக்க நின்றிருந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் ஜீப்பின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கி, முன் சீட்டில் இருந்த ஆர்டிஓ ஆரமுத தேவசேனா இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த டிரைவர் பிரபாகரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பஸ்-பொக்லைன்- ஜீப் மோதல் பெண் ஆர்டிஓ பரிதாப பலி appeared first on Dinakaran.
