இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அந்த உணவகத்தில் சுகாதரமற்ற முறையில் உண்வு தயாரிக்கப்படுவதை கண்டறிந்து 2,000 ரூபாய் அபரதாமும் விதித்தனர். இந்நிலையில் தனக்கு உணவு டெலிவரி செய்த சுமோட்டோ மற்றும் உணவு தயாரித்து தந்த மெஸ் ஆகியோர் ரூ.250 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி ஜெகபிரபு சென்னை வடக்கு நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட உணவகம் மற்றும் சுமோட்டோ ஆகியவை இணைந்து பாதிக்கப்பட்ட ஜெகபிரபுவுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாகவும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும் என மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு உத்தரவிட்டது.
The post தரம் குறைந்த உணவால் மூச்சுத்திணறல் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.30,000 இழப்பீடு: சென்னை நுகர்வோர் கோர்ட் உணவகத்திற்கு உத்தரவு appeared first on Dinakaran.
