முதல்கட்ட வாக்குப்பதிவில் பெரும்பான்மை வாக்குகள் யாருக்கும் கிடைக்கவில்லை. புகைப்போக்கியில் இருந்து கரும்புகை வெளியேறி இதை உணர்த்தியது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு நடந்த வாக்கெடுப்பில் புதிய போப்பாக அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். அவர் போப் 14ம் லியோ என அழைக்கப்படுவார் என கர்தினால்கள் அறிவித்தினர். இந்நிலையில் மே 18ம் தேதி நடைபெற உள்ள திருப்பலியில் போப் 14ம் லியோ பதவி ஏற்க உள்ளார். இதைத்தொடர்ந்து 21ம் தேதி நடைபெறும் முதல் திருப்பலிக்கு போப் 14ம் லியோ தலைமை தாங்குவார் என வாடிகன் தெரிவித்துள்ளது.
The post மே 18ல் புதிய போப் பதவி ஏற்பு appeared first on Dinakaran.
