தேர் வடத்தை தொட்டு வழங்குவது ஆதிதிராவிடர்களின் பாரம்பரிய உரிமை. அதை செய்ய சென்றவர்களை சில இளைஞர்கள், சாதியை சொல்லி தாக்கியுள்ளனர். இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பள்ளி மாணவர்கள் மீதும், காயமடைந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை கண்டித்து, எனது தலைமையில் புதுக்கோட்டையில் வரும் 13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஜம்மு காஷ்மீரில், இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் எத்தனை இடங்கள் என்பது குறித்து பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post கர்நாடகாவில் உள்ளதுபோல் வன்கொடுமைகளை விசாரிக்க தமிழகத்தில் தனி காவல்நிலையம்: திருமாவளவன் எம்பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.
