இதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எவ்விதமான அறிவுறுத்தல்களும் இல்லை என முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல் ஆகியோர் மனுவிற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர், சிபிஎஸ்இ மண்டல அலுவலர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இயக்குநர், தனியார் பள்ளிகளின் இயக்குநர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.
The post சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வழக்கு: முதன்மை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
