முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021-22ம் நிதி ஆண்டில் 4,08,740 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392.52 கோடி, 2022-23ம் நிதி ஆண்டில் 4,49,209 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,642.01 கோடி, 2023-24ம் நிதி ஆண்டில் 4,79,350 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30,074.76 கோடி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் 35,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 4,84,659 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,189.87 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
2025-26ம் ஆண்டிற்கான நிலையறிக்கையில், சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க, முதல்வர் அறிவித்துள்ளதை தொடர்ந்து, நேற்று வரை 7,917 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.698.87 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 4 ஆண்டுகளில் 18,29,875 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 2 கோடியே 37 லட்சத்து 88 ஆயிரத்து 375 சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1,12,998.03 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைத்து, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post 2,37,88,375 சுய உதவிக்குழு மகளிருக்கு ரூ.1,12,998.03 கோடி வங்கி கடன் இணைப்பு: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை appeared first on Dinakaran.
