ஆனால் வாகனம் அங்கு நிற்காமல் சிறிது தூரம் தள்ளி நின்றது. அதில் இருந்த ஓட்டுனர் பவானியை சேர்ந்த பாலச்சந்தர் (37) வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடினார். அவரை விரட்டிப் பிடித்த போலீசார் வாகனத்தை சோதனையிட்டனர். அதில் 65 சாக்கு மூட்டைகளில் 1625 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. வெப்படை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி வையப்பமலையில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதாக பாலச்சந்தர் தெரிவித்தார். இதையடுத்து வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், பாலச்சந்தரை கைது செய்து நாமக்கல் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர்.
The post கோழிப்பண்ணைகளுக்கு கடத்த முயன்ற 1625 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர் கைது appeared first on Dinakaran.
