மொத்தமுள்ள 252 கர்தினால்களில் 135 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இதில் 108 கர்தினால்கள் போப் பிரான்சிசால் நியமிக்கப்பட்டவர்கள். 135 கர்தினால்கள் சிஸ்டைன் சேப்பலில் நடக்கும் ரகசிய மாநாட்டில் பங்கேற்பார்கள். அப்போது இந்த சேப்பல் மூடி சீலிடப்படும். புதிய போப் தேர்வு செய்யப்படும் வரையிலும் கர்தினால்களை வெளி உலகில் இருந்து யாரும் தொடர்பு கொள்ள முடியாது. புதிய போப்பை தேர்வு செய்ய கர்தினால்கள் வாக்குச்சீட்டில் தங்கள் வாக்கை அளிப்பார்கள். இரண்டில் 3 பங்கு பெரும்பான்மை பெறுபவர்கள் புதிய போப்பாக அறிவிக்கப்படுவார்கள். இந்த பெரும்பான்மை எட்டாத பட்சத்தில் வாக்குச்சீட்டுகள் எரிக்கப்படும். அதன் மூலம் சேப்பலின் கூரையில் உள்ள சிம்னி மூலமாக கரும்புகை வெளியிடப்படும். புதிய போப் தேர்வு செய்யப்பட்ட உடன் அதை வெளி உலகுக்கு உணர்த்தும் வகையில் வெண் புகை வெளியிடப்படும். அதோடு தேவாலய மணி ஒலிக்கப்படும்.
The post போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் ரகசிய மாநாடு மே 7ல் தொடக்கம்: வாடிகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.
