இவர்களிடம் நடத்திய விசாரணையில் தஸ்லீமா சுல்தானாவுக்கும், பிரபல மலையாள நடிகர்களான ஷைன் டோம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாசி மற்றும் மாடல் அழகியான சவும்யா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 28ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி 3 பேருக்கும் ஆலப்புழா கலால்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி இன்று காலை நடிகர்கள் ஷைன் டோம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி, மாடல் அழகி சவும்யா ஆகியோர் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் கலால்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேரையும் ஒன்றாக ஒரே அறையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post கஞ்சா கடத்தல் கும்பலுடன் தொடர்பு: நடிகர்கள் ஷைன் டோம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.
