திருநெல்வேலி : திருநெல்வேலி – செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கையை 12ல் இருந்து 16 ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த தெற்கு ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியானது.