கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்காக சிபிசிஐடி முன்பு சயான் ஆஜர்!!

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்காக சிபிசிஐடி முன்பு சயான் ஆஜராகினார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 12 பேரை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி சிறப்பு விசாரணை குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 250க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தியுள்ளது.

குறிப்பாக இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 12 பேரிடம் ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு அதனை சாட்சியங்களாக பதிவு செய்தனர். இந்நிலையில், 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானை இரண்டாவது முறையாக ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தார்கள். இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2-வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள சயான், சிபிசிஐடி முன் 2-வது முறையாக ஆஜராகியுள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலத்தில் உள்ள சயான் ஆஜராகியுள்ளார். சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையிலான குழு சயானிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்காக சிபிசிஐடி முன்பு சயான் ஆஜர்!! appeared first on Dinakaran.

Related Stories: