நிதி உதவி நிறுத்தியதை எதிர்த்து டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஹார்வர்டு பல்கலை. வழக்கு: அமெரிக்காவில் பரபரப்பு

பாஸ்டன்: உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளக் கோரி அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது. குறிப்பாக சர்வதேச மாணவர்கள் இஸ்ரேல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து போராட்டம் நடத்துவதை கட்டுப்படுத்தவும், மாணவர் சங்கங்களை ஆதரிப்பதை நிறுத்தவும் வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையிலும் மாற்றங்கள் செய்ய டிரம்ப் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஆனால், டிரம்ப் அரசின் உத்தரவுக்கு அடிபணிய மாட்டோம் என பல்கலைக்கழக தலைவர் ஆலன் கார்பர் கூறிய சில மணி நேரத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் ரூ.19,000 கோடி நிதி உதவியை நிறுத்துவதாக டிரம்ப் அரசு நிர்வாகம் அறிவித்தது.

இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் சார்பில் பாஸ்டன் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ‘டிரம்ப் நிர்வாகம் தனது நிதி அதிகாரத்தை பயன்படுத்தி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்வி சார்ந்த முடிவுகளை கட்டுப்படுத்த பார்க்கிறது. இது அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு எதிரானது. மேலும், இது கூட்டாட்சி சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் மீறுகிறது. நிதி உதவியை நிறுத்துவதால் மாணவர்களின் ஆராய்ச்சிகள் பாதிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

The post நிதி உதவி நிறுத்தியதை எதிர்த்து டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஹார்வர்டு பல்கலை. வழக்கு: அமெரிக்காவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: