திமுக கவுன்சிலர் கணவருக்கு வெட்டு: வாலிபர் கைது


அரக்கோணம்: திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவரை சரமாரி வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூரை சேர்ந்தவர் சுதாகர்(48). இவரது, மனைவி அஸ்வினி, திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் சுதாகருக்கும், அதேபகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அவினேஷூக்கும்(28) முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த அவினேஷ் கத்தியால் சுதாகரை சரமாரியாக வெட்டி உள்ளார்.

இதில் அவரது முகம், மார்பு, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து அவினேஷை கைது செய்தனர்.

The post திமுக கவுன்சிலர் கணவருக்கு வெட்டு: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: