டெய்ர் அல்: காசா மீது இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். காசாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்த போர் கடந்த ஜனவரி 19ம் தேதி போர் முடிவுக்கு வந்தது. முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இரண்டாம்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் இழுபறியில் இருக்கிறது. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் மீண்டும் பயங்கர தாக்குதலை தொடங்கி உள்ளது. காசா மீது கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
The post காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்;90 பேர் பலி appeared first on Dinakaran.