சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாவட்டக் கல்வி அலுவலர், இணை இயக்குநர் ஆகியோருக்கான நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு 15.3.2025 நிலவரப்படி தகுதி வாய்ந்த கண்காணிப்பாளர்களின் பெயர்ப் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர்கள்,
தங்களது ஆளுகையில் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளர்களிடம் கையொப்பம் பெற்று மாவட்ட அளவில் கோப்பினை பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தற்போது வெளியிடப்படும் பட்டியலின்படியே தமிழ்நாடு பொதுப் பணியின் கீழ் வரும் நேர்முக உதவியாளர் பதவிக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பள்ளி கல்வித்துறையில் பதவி உயர்வு பெயர் பட்டியல் தயார் appeared first on Dinakaran.