இதற்கிடையே, ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகள் உள்ள பகுதிகளில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 74 பேர் உயிரிழந்தனர். 171 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, இஸ்ரேலை நோக்கி ஹவுதிகள் ஒரு ஏவுகணையை ஏவியதாகவும், அதனை இஸ்ரேல் இடைமறித்ததாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
The post ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; 74 பேர் பலி appeared first on Dinakaran.