இந்நிலையில், சிகிச்சை முடிந்து நேற்று மதியம் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கார் மூலமாக புறப்பட்டு சென்றார். இதற்கு முன்னதாக கோவையை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர். பின்னர், ஆயுர்வேத சிகிச்சை முடிந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், செய்தியாளர்கள் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ், ‘கூட்டணி குறித்த கேள்விக்கு இன்று விடுமுறை. அனைவருக்கும் புனித வெள்ளி வாழ்த்துகள்’ என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
The post அதிமுக-பாஜ கூட்டணி விவகாரம் இன்னைக்கு லீவு நோ கொஸ்டின்: ஓபிஎஸ் எஸ்கேப் appeared first on Dinakaran.
