மேலும் யானை, டைனோசர், காட்டெருமை உட்பட்ட விலங்குகளின் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் இதய வடிவில் செல்பி பாய்ன்ட், சிறுவர்களுக்கு பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகள், இசை நீரூற்று போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பூங்காவில் நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50 வசூலிக்கபடுகிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பூங்காவை பார்வையிடலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
The post கோடை சீசனை முன்னிட்டு மூணாறில் மே 1 முதல் மலர் கண்காட்சி துவக்கம் appeared first on Dinakaran.
