புதுப்பாளையம் சந்தை ரூ.5.41 லட்சத்திற்கு ஏலம்

ராசிபுரம், ஏப்.17: ராசிபுரம் அடுத்த ஆர்.‌புதுப்பாளையம் ஊராட்சியில், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். நடப்பு 2025-2026ம் ஆண்டு வார சந்தைக்கான ஏலம், கடந்த மார்ச் மாதமே நடந்தது. வெண்ணந்தூர் வட்டார அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அதிமுகவினர், திமுகவினர் என பலரும் கலந்து கொண்ட நிலையில், ஏலம் ரூ.3லட்சத்து 36 ஆயிரத்தில் இருந்து தொடங்கி, இரு தரப்பினரும் ஏலத்தை கேட்ட நிலையில் இறுதியாக நாராயணசாமி ரூ.5,41,000க்கு ஏலம் விடப்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஏலம் விடப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post புதுப்பாளையம் சந்தை ரூ.5.41 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: