ஜம்மு எல்லையில் சுற்றி திரிந்த ஆந்திர நபர் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் உள்ள சர்வதேச எல்லை அருகே கடந்த மார்ச் 31ம் தேதி எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் சுற்றி திரிவதை கண்ட வீரர்கள் அவரை பிடித்து விசாரித்தனர்.

ஆனால் அவர் சரியாக பதிலளிக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது அவர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நெஹாதுருவை சேர்ந்த வெங்கட் ராவ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தீவிர முயற்சிக்கு பிறகு வெங்கட் ராவ் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

The post ஜம்மு எல்லையில் சுற்றி திரிந்த ஆந்திர நபர் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: