பின்னர் திருவிளக்கு பூஜை, படி பூஜை நடந்தது. இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், நக்கசேலம், சிறுவயலூர், குரூர், மாவலிங்கை, பெரகம்பி, பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, கீழக்கணவாய், செஞ்சேரி, குரும்பலூர், அம்மாபாளையம், சீதேவிமங்கலம், பாடாலூர், திருவிளக்குறிச்சி, இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், காரை, தெரணி, ஈச்சங்காடு, மருதடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்துக் கொண்டு படியில் விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு நடத்தினர். அதனையடுத்து தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
The post செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் படிபூஜை விழா கோலாகலம் திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.
