சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு அருகே உள்ள மண்டி நகரில் நேற்று காலை 9.18 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.4 என பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதே போல் அரசு சொத்துக்களுக்கும் எந்த சேதமும் இல்லை. இருந்தாலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு உள்ள மக்கள் அலறி அடித்து பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர்.
The post இமாச்சலில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.