சண்டிகர்: இமாச்சல் பிரதேசம் குலு மாவட்டம் பார்வதி பள்ளத்தாக்கு அடுத்த கசோல் கசோலுக்குச் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று இன்று அதிகாலை 4 மணியளவில் கவிழ்ந்து. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட 31 பேர்காயமடைந்தனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உயர் சிகிச்சைக்காக நெர்ச்சோக் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மேலும் ஆறு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மீதமுள்ள பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்துக்கு அதிக வேகம் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
The post சுற்றுலா பஸ் கவிழ்ந்து 31 பேர் காயம் appeared first on Dinakaran.