சென்னை : நெருக்கடி கொடுத்து அதிமுகவை கூட்டணிக்கு பணிய வைத்துள்ளது பாஜக என்று திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், “பாஜகவுடன் அதிமுக சேர்ந்ததற்கு பல்வேறு நெருக்கடிகளும் காரணம். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு அதிமுகவுக்கு பின்னடைவே ஏற்படும். பாஜகவுடன் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறிய ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துவிட்டார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post பாஜகவுடன் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறிய ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துவிட்டார்கள் : திருமாவளவன் விமர்சனம் appeared first on Dinakaran.