ஜம்மு காஷ்மீரில் இறந்துபோன கோகுல் சக்தியின் உடல் ராணுவ வாகனத்தில் சொந்த ஊரான மல்லி குந்தத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல் போலீஸ் தரப்பிலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொது மயானத்திற்கு கோகுல் சக்தியின் சடலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்திய பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
The post சேலம் அக்னிபாத் வீரர் காஷ்மீரில் உயிரிழப்பு appeared first on Dinakaran.