டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் இன்று நேரில் ஆஜராக உத்தரவு

திருச்சி: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் நடந்து வருகிறது. விசாரணைக்கா ஏப்.7ம் தேதி (நேற்று) சீமான் நேரில் ஆஜராகி பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை நீதிபதி விஜயா முன்பு வந்தது. அப்போது சீமான் நேரில் ஆஜராகவில்லை.

இதனால் அவர் இன்று (நேற்று) மாலை 5 மணிக்குள் ஆஜராகவில்லையென்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்தார். இந்நிலையில் நேற்று மாலை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேரில் ஆஜரானார். தொடர்ந்து, சீமான் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், சீமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். எனவே, ஆஜராக முடியவில்லை என தெரிவித்தனர். இன்று (8ம்தேதி) காலை நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். எனவே இன்று சீமான் ஆஜராக தவறினால் பிடிவாரன்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.

The post டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் இன்று நேரில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: