தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதையடுத்து இன்று காலை 8.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது தொடர்ந்து நாளை வரை தென்மேற்கு வங்கக்கடலில், வடமேற்கு திசையில் நகர்ந்து அதன் பின்னர் அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடலில் வடக்கு நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் காற்றழுத்தத்தாழ்வு பகுதி நகரக்கூடிய திசையை பொறுத்து தமிழகத்தில் கன மழைக்கான வாய்ப்புள்ளதா என்பது குறித்து அடுத்தடுத்து வரும் வானிலை மைய தகவலில் தெரியவரும்.
The post வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.