சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசேகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும் ஞானசேகரன் தாக்கல் செய்த மனு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.