நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் தாது மணல் முறைகேடு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். தாது மணல் முறைகேடாக எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தாது மணல் முறைகேடு தொடர்பாக சென்னையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழும்பூரில் தனியார் அலுவலகம் மற்றும் அந்த நிறுவனத்தின் ஆடிட்டர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
The post தாது மணல் முறைகேடு: நெல்லை திசையன்விளையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை! appeared first on Dinakaran.