அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு டிரம்ப் வரி விதித்ததால் இந்திய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு..!!

வாஷிங்டன்: அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு டிரம்ப் வரி விதித்ததால் இந்திய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்துள்ளன. பங்குகள் விலை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவன பங்குகள், மருந்து நிறுவனப் பங்குகள், உலோக நிறுவனப் பங்குகள் கடுமையாக விலை குறைந்து வர்த்தகமாகின்றன. சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளில் 2496 நிறுவனப் பங்குகள் குறைந்தும், 834 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் உள்ளன.

நடுத்தர முதலீடு மற்றும் சிறு முதலீட்டு நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்ததால் அவற்றின் குறியீட்டு எண்கள் 3% மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்கா இறக்குமதி செய்யும் மருந்து பொருட்கள் மீது வரி விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளில் மருந்து தயாரிப்பு நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. நேற்று வரை மருந்து கம்பெனிகளுக்கு பாதிப்பு இல்லை என கருதிய நிலையில் டிரம்ப் புதிய அறிவிப்பு அந்த எண்ணத்தை தகர்த்தது. ஸ்ட்ரைடெஸ் ஃபார்மா சைன்ஸ் நிறுவனப் பங்குகள் விலை 12% சரிந்து ரூ.612-க்கும் சிப்லா பங்கு 5.36% விலை குறைந்து.

 

The post அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு டிரம்ப் வரி விதித்ததால் இந்திய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: