இதையடுத்து அங்கு சென்ற நித்தியானந்தா சீடர்கள் ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த பொலிவியா அரசு, பழங்குடியின மக்களின் நிலத்தை நித்தியானந்தா அபகரிக்க முயன்றதாக கூறி ஒப்பந்தம் செல்லாது என அறிவித்தது. மேலும், அங்கு தங்கி இருந்த நித்தியானந்தா சீடர்கள் 20 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இதில் 12 பேர் சீனர்கள், 5 முதல் 7 பேர் இந்தியர்கள் மற்றவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. பழங்குடினரிடம் இருந்து ஆக்கிரமித்த நிலத்தை தான் கைலாசா என்று நித்தியானந்தா கூறி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The post வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நித்யானந்தாவின் சீடர்கள்; அமேசான் காட்டில் நிலம் அபகரிப்பு வழக்கு: மீண்டும் சிக்கலில் நித்யானந்தா!! appeared first on Dinakaran.