இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 127 பேர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘‘தேர்வின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மை நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது. முழு தேர்வு செயல்முறையும் மோசமானது மற்றும் களங்கமானது.
2024ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி 25753 பேரின் பணி நியமனங்களை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகின்றது. மனிதாபிமான அடிப்படையில் சில மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு அவர்கள் பணியில் நீடிப்பார்கள். அரசு மூன்று மாதங்களில் புதிய தேர்வு செயல்முறையை தொடங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
The post மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர்கள் பணிநீக்கம் உறுதி: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.