அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான குழு, கல்வி நிறுவனங்களில் அதிக ஆசிரியர்களை நியமிக்கவும், வினாத்தாள் கசிவை முடிவுக்குக் கொண்டுவர சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சரியாக நேரத்தில் ஊதியங்களை வழங்கவும் எடுத்துரைத்தது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான வெளியுறவுக் குழு, வெளிநாடுகளில் குடியேறிய இந்திய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புகளின் அவசியத்தை அவையில் பேசியது.மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்புக்கு இவையெல்லாம் ஒரு சில எடுத்துக்காட்டுகள்தான். எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாட்டு மக்களின் உரிமைகள், நல்வாழ்வுக்காகப் போராட ஒவ்வொரு ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்”. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காகப் போராட ஒவ்வொரு ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்: ராகுல் காந்தி உறுதி!! appeared first on Dinakaran.