ஊத்துக்கோட்டை, ஏப். 4: பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில், கோடுவெளி ஊராட்சி காரணிபேட்டை கிராமத்தில் 2019-2020ம் ஆண்டு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த பயணியர் நிழற்குடையை அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், மாணவ மாணவிகள் ஆகியோர் சென்னை, செங்குன்றம், ஆவடி ஆகிய பகுதிகளுக்குச் செல்ல பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது இந்த பயணியர் பஸ் நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து பெயர்ந்து விழுந்துவிட்டது. இதனால், இந்த பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே காத்திருக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து கிடக்கும் பயணியர் நிழற்குடையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
The post தாமரைப்பாக்கம் அருகே நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.