இதற்கு பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,‘‘சென்னை தூத்துக்குடி இடையே தற்போது 12693/12694 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்து நகர் எக்ஸ்பிரஸ் தினசரி சேவை இயக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் வசதிக்காக, இணைப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது. 56724/56723 வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி பயணிகள் ரயில் 16127/16128 சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று 56725/56726 தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில் 22667/22668 நாகர்கோவில் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரசுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவைத்தவிர தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது என்பது புதிய ரயில்களுக்கான போக்குவரத்து தேவை உள்ளிட்ட வளங்கள் கிடைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ரயில்வேயின் செயல் திட்டத்தில் இடம்பெறும் என்றார்.
The post சென்னை – தூத்துக்குடி இடையே வந்தே பாரத் இயக்கப்படுமா..? மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி appeared first on Dinakaran.
