இஸ்லாமியர்களின் நலன் காக்கவே இந்த சட்ட திருத்தம் என பொய் வாதம் செய்கிறது பா.ஜ. அப்படி ஒன்றிய அரசு சொல்வதுபோல் இந்த சட்டம் இஸ்லாமியர்களின் நலன் காக்கிறது என்றால் அதை தாக்கல் செய்த குழுவில் ஏன் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை? தமிழ்நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மாநில சட்டசபையில் இந்த சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் தவெகவும் பங்கேற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வக்பு சட்ட திருத்த மசோதா சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பாஜ அரசு: தவெக தலைவர் விஜய் அறிக்கை appeared first on Dinakaran.
