ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, இந்த வழக்குகளை சிபிஐ அல்லது, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய அமர்வு, ஞானசேகரனுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விரிவான விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
The post அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி மனு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.