சென்னை, ஏப். 3: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை இடையே காலை 5.40, 10.15, 12.10 இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள், அதேபோன்று மறுமார்க்கமாக மதியம் 1.15, 3.10 இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள், சூலூர்பேட்டை- நெல்லூர் இடையே காலை 8.10 மணிக்கும், மறுமார்க்கமாக நெல்லூர்- சூலூர்பேட்டை இடையே காலை 10.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30, 11.35 மதியம் 1.40 மணிக்கும், மறுமார்க்கமாக மதியம் 1, 2.30, 3.15, 3.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், ஆவடி-மூர்மார்க்கெட் இடையே மாலை 4.25 மணிக்கும், சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையே மதியம் 12.40, 2.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி – தாம்பரம் இடையே மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து ரத்து ெசய்யப்பட்ட மின்சார ரயில்களுக்கு பதிலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post சென்ட்ரல்- கூடூர் இடையே பராமரிப்பு பணி:19 மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.