இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் காணொலி காட்சி மூலம் ஆற்றிய ஆன்மிக சொற்பொழிவில், ‘‘இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்’’ என கூறி உள்ளார். இதனால் நித்தியானந்தாவின் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில், அவருடைய ரூ.4 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு யார் அதிபதி என்ற கேள்வியும் எழுந்தது.
பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவாகி உள்ள நித்தியானந்தா, போலி அடையாளங்களுடன் மீண்டும் இந்தியாவிற்குள் வருவதற்காகவே அவர் இறந்துவிட்டதாக திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதாகவும் செய்திகள் கூறப்பட்டது. இந்த நிலையில் கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதில் நித்தியானந்தா ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் உயிரோடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்ற யுகாதி கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்று உரையாற்றியதாக கூறப்பட்டுள்ளது.
The post நித்தியானந்தா ஆரோக்கியமாகவும், உயிருடனும் இருக்கிறார் : கைலாசா அறிவிப்பு appeared first on Dinakaran.