கிராமத்திற்குள் நுழைந்த யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே

குடியாத்தம், மார்ச் 29: குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. குடியாத்தம் வனப்பகுதி அருகில் உள்ள தனகொண்டபள்ளி, சைனகுண்டா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்டமிட்டா, மோர்தானா, வி.டி.பாளையம், கதிர்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் புகுந்து, அங்குள்ள பயிர்களை சேதம் செய்து வருகிறது. அந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று குடியாத்தம் அடுத்த பரதராமி கிராமத்தில் ஒற்றை யானை பயங்கர பிளரும் சத்தத்துடன் நுழைந்தது. இதையறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்து அந்த யானையை மீண்டும் வனப்பகுதிகள் விரட்டியடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கிராமத்திற்குள் நுழைந்த யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: