ஆப்பிரிக்கன் மாரிகோல்டு, டவாப் சால்வியா, ஜீனியா, பெலிசியா, ஆஸ்தர், பிரென்ச் மாரிகோல்டு என பல்வேறு அரியவகை மலர்களை வளர்க்கும் பணிகளில் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோடைவிழாவுக்கான பணிகள் நடைபெற்று வந்தாலும் அண்ணா பூங்கா ரோஜா தோட்டம் ஏரி பூங்கா ஆகிய இடங்களில் வண்ண ரோஜாக்கள் பூத்து குலுங்குவது ரம்மியமாக கட்சி அளித்து வருகிறது. ஏற்காடு கோடை விழாவை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மலைப்பாதை வழிகளில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
The post ஏற்காடு கோடை விழா; 15,000 பூந்தொட்டிகளில் 50 வகையான மலர் நாற்றுகள் நடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.