ஏற்காடு கோடை விழா; 15,000 பூந்தொட்டிகளில் 50 வகையான மலர் நாற்றுகள் நடும் பணி தீவிரம்

சேலம்: சேலம் ஏற்காட்டில் கோடைவிழாவுக்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் 50க்கும் மேற்பட்ட வகைகளில் வண்ண மலர் நாற்றுகள் நடும் பணியில் தோட்டக்கலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் முக்கிய கோடை வாசஸ்தலங்களில் ஒன்றான ஏற்காட்டில் வரும் மே மாதம் கோடை விழா நடைபெற உள்ளது. இதை ஒட்டி அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சிகள் முன்னேற்பாடுகள் தொடங்கி உள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் சுமார் 50 வகையான வண்ண மலர்களுக்கான நாற்றுகளை நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆப்பிரிக்கன் மாரிகோல்டு, டவாப் சால்வியா, ஜீனியா, பெலிசியா, ஆஸ்தர், பிரென்ச் மாரிகோல்டு என பல்வேறு அரியவகை மலர்களை வளர்க்கும் பணிகளில் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோடைவிழாவுக்கான பணிகள் நடைபெற்று வந்தாலும் அண்ணா பூங்கா ரோஜா தோட்டம் ஏரி பூங்கா ஆகிய இடங்களில் வண்ண ரோஜாக்கள் பூத்து குலுங்குவது ரம்மியமாக கட்சி அளித்து வருகிறது. ஏற்காடு கோடை விழாவை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மலைப்பாதை வழிகளில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

The post ஏற்காடு கோடை விழா; 15,000 பூந்தொட்டிகளில் 50 வகையான மலர் நாற்றுகள் நடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: