குடியாத்தம், மார்ச்.28 : குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், தலைமையிலான போலீசார் நேற்று மாலை பரதராமி சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 130 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், குடியாத்தம் அடுத்த வீரசெட்டிபல்லி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்(29), சாமிரெட்டிபல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜபியுல்லா(38) என்பதும், ஆந்திராவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. பின்னர், போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து பைக் மற்றும் புகையிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
The post புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது ஆந்திராவில் இருந்து appeared first on Dinakaran.