உதகை அருகே கவர்னர் சோலை வனப்பகுதியில் புலி தாக்கி பழங்குடியின இளைஞர் உயிரிழப்பு..!!

நீலகிரி: உதகை அருகே கவர்னர் சோலை வனப்பகுதியில் புலி தாக்கி தோடர் பழங்குடியின இளைஞர் உயிரிழந்தனர். உதகை அருகே கவர்னர் சோலை வனப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட தோடர் பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு உள்ள கொல்லக்கோடு மந்தையை சேர்ந்தவர் கேந்தர் குட்டன்(38). இவர் எருமை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது எருமைகளை மேய்ச்சலுக்காக கவர்னர் சோலை வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். இரவு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரை உறவினர்கள் விடிய விடிய தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், உறவினர்கள் இன்று அதிகாலையில் தேடிய போது கவர்னர் சோலை வனப்பகுதியில் அவரது உடலானது கண்டெடுக்கப்பட்டது. அவர் புலி தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாதி உடலை புலி கடித்து தின்ற நிலையில் இருந்த இளைஞரின் சடலத்தை மீட்டனர். மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post உதகை அருகே கவர்னர் சோலை வனப்பகுதியில் புலி தாக்கி பழங்குடியின இளைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: