நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலி தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலி தாக்கியதில் பழங்குடியின இளைஞர் உயிரிழந்தார். கவர்னர் சோலை வனப்பகுதியில் பழங்குடியின இளைஞரை புலி அடித்துக் கொன்றது. கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டனின் பாதி உடல் மீட்கப்பட்டது. காணவில்லை என குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

The post நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலி தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: